Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 82

மிகைப் பாடல்கள் – பகுதி 1

செல்வச் சிறப்புடன் ‘அகில நாதன்’ என்னும் போற்றுதலைப் பெற்று, அறம், இரக்கம், ஒப்புரவுப் பண்புகளுடன் தயரதன் வாழ்ந்துகொண்டிருக்கையில் ஒருநாள். 1-1
அரசர்களின் முடி பணியத் தயரதன் அரியணையில் வீற்றிருந்தான். 1-2
“இது என்ன சோலை” என்று இராமன் வினவியபோது முனிவன் சொல்லத் தொடங்கினான். 24-1
சம்பரன் என்னும் அரக்கனோடு இந்திரன் போரிட்டுத் தோற்றபோது வெம்பிப்போன காடு இது என்று முனிவர் கூறினார். 24-2
மண்ணுலகுக்கு வந்த இந்திரன் உன் தந்தை நாட்டில் இருக்கும் இந்த இடத்தைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று சொல்லிக்கொண்டு இங்கு இருந்துவந்தான். 24-3

அப்பெருந் திருவொடும் 'அகில நாதன்' என்று,
எப்பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே,
தப்ப அருந் தருமமும் தயாவும் தாங்கியே,
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள்.     1-1

அரிஅணை மிசை தனில், அழகு மன்றினில்,
புரி தவம் மிகு பதப் பொற்பின் நீடு அருள்
அரசர்கள் முடி படி அணைய, அம் பொனின்
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ.               1-2

'"இனைய சோலை மற்று யாவது?" என்று, மா
முனிவ! கூறு' என முதல்வன் கூறலும்,
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்,
'தனு வலாய்! இதன் தன்மை கேள்' எனா,        24-1

'சம்பரப் பெயர்த் தானவ(ன்)னுடன்
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள்,
வெம்பி, மற்று அவன் வெற்றி கொண்ட போது,
அம்பரம் இழந்து, அவனி வந்தனன்;     24-2

'அவனி வந்து, மன்னவர் இடம்தொறும்,
தவனன் என்னவே தான் உழன்று, அறிந்து,
"இவனில் வேறு மற்றுஇல்லை எற்கு" எனா,
உவன் விரும்பி வந்து, உந்தை நாடு உறா,      24-3

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...