Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - கையடைப் படலம் Kamba Ramayanam 83

மிகைப்பாடல் பகுதி 2

மணக்கும் ஐந்து சோலைகளையும் இந்த இடத்துக்கு வரும்படி அழைத்து, அந்த இடத்தில் இந்திரன் வாழ்ந்துவந்தான். 24-4
இந்த இடத்தில் இருந்துகொண்டு இந்திரன் நித்திய கடமைகளைச் செய்துவந்தான். 24-5
இந்தச் சோலை உருமாறிக் கரிந்து கிடப்பது ஏன் என்று இராமன் வினவினான். 24-6
இந்திரனை வென்று சம்பரன் இதனை அழித்தான். அப்போது இந்திரன் உன் தந்தையிடம் முறையிட்டுக்கொண்டான். 24-7
அப்போது உன் தந்தை படையுடன் வந்து சம்பரனை அழித்துச் சோலையை இந்திரனுக்கு அளித்தான். 24-8
அது முதல் இந்தச் சோலை அவனி-வந்த-கா என்னும் பெயருடன் வழங்கலாயிற்று. 24-9

'இந்த இவ் இடத்து எய்தி, இந்திரன்,
"சந்த வார் பொழில் தரு ஒர் ஐந்தையும்
வந்து நிற்க" எனா, மன நினைப்பின்முன்
முந்து வந்து மா முரல நின்றவால்.      24-4

'நின்ற சோலைவாய், நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு, அவன்
நன்றியால் இருந்து, அரசை நண்ணியே,
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான்.        24-5

'உருவம் மாறி, வேறு உருவமாகியே,
நிருப! நின் குடை நிழலின் நிற்றலும்,
பரிவின் நோக்கி, "நீ பகர்தியால்" எனத்
தருவின் நாயகந்தான் விளம்பினான்:                24-6

'"சதமகன் தனைச் சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான்;
கதம் அகன்றிடாக் கனக வெற்பு அவன்
விதம் அகன்று வந்து, உன்னை மேவினேன்."           24-7

'என்றபோது தன் இரதம் ஏறியே
சென்று, மற்று அவன் சேனையோடு உகக்
கொன்று, வாசவன் அரசு கொள்ளவே
அன்று அளித்து, மீண்டு அயோத்தி மேவினான்.     24-8

'அன்னது ஆதலின் அவனி வந்த கா
இன்ன நாமம், இச் சோலை' என்றலும்,
மன்னர்மன்னவன் மதலை, 'நன்று' எனா,
பின்னை நன்று உயிர்ப் பிரியம் ஆயினார்.     24-9  

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் - 6. கையடைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...