அங்கநாடு
சிவனுக்குக் காமம் மூட்டக் காமன் தன் மலர் அம்புகளை இங்கிருந்துதான் சிவன்மீது வீசினான். சிவன் கொண்ட சினம் காமனைச் சுடக் காமன் வெந்து பூளாப்பூ போலச் சாம்பல் ஆனான். 1
காமன் எரிந்த பின்னர் அவனது எலும்பு அங்கங்கள் கிடப்பதால் இந்த நாட்டை அங்கநாடு என்றனர். 2
பற்று, அவா, இவற்றை அடியோடு விட்டுவிட்டு, பிறவி நோய் தீர, தூய உணர்வோடு, அறிவு பெற்ற வானவன் இந்த நாட்டில் இருந்துகொண்டுதான் யோக-தவம் செய்தான் என்றால் இந்த நாட்டின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ? 3
இவ்வாறு அந்த நாட்டின் பெருமைகளை அந்த ஊரில் வாழும் அந்தணன் ஒருவன் கூறினான். அதனைக் கேட்டு அந்த ஊரில் அந்த இரவு அங்குத் தங்கி மூவரும் காலையில் எழுந்து சென்றனர். 4
இங்குள்ள ஈரத்தைச் சூரியன் முழுவதுமாக உரஞ்சிவிட்டான். தீக்கடவுளும் இதனைக் கண்டால் தன் உள்ளமும், கண்ணும் வெந்துபோவான். 5
'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான். 1
'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2
'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?' 3
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார். 4
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
சிவனுக்குக் காமம் மூட்டக் காமன் தன் மலர் அம்புகளை இங்கிருந்துதான் சிவன்மீது வீசினான். சிவன் கொண்ட சினம் காமனைச் சுடக் காமன் வெந்து பூளாப்பூ போலச் சாம்பல் ஆனான். 1
காமன் எரிந்த பின்னர் அவனது எலும்பு அங்கங்கள் கிடப்பதால் இந்த நாட்டை அங்கநாடு என்றனர். 2
பற்று, அவா, இவற்றை அடியோடு விட்டுவிட்டு, பிறவி நோய் தீர, தூய உணர்வோடு, அறிவு பெற்ற வானவன் இந்த நாட்டில் இருந்துகொண்டுதான் யோக-தவம் செய்தான் என்றால் இந்த நாட்டின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ? 3
இவ்வாறு அந்த நாட்டின் பெருமைகளை அந்த ஊரில் வாழும் அந்தணன் ஒருவன் கூறினான். அதனைக் கேட்டு அந்த ஊரில் அந்த இரவு அங்குத் தங்கி மூவரும் காலையில் எழுந்து சென்றனர். 4
இங்குள்ள ஈரத்தைச் சூரியன் முழுவதுமாக உரஞ்சிவிட்டான். தீக்கடவுளும் இதனைக் கண்டால் தன் உள்ளமும், கண்ணும் வெந்துபோவான். 5
'திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள்,
இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து, அன்று தொட்டு அனங்கனே ஆயினான். 1
'வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்,
ஆரணத்து உறையுளாய்! அங்க நாடு; இதுவும், அக்
காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே. 2
'பற்று அவா வேரொடும் பசை அற, பிறவி போய்
முற்ற, வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன், இருந்து யோகு செய்தனன் எனின்,
சொற்றவாம் அளவதோ, மற்று இதன் தூய்மையே?' 3
என்று, அ(வ்) அந்தணன் இயம்பலும், வியந்து, அவ் வயின்
சென்று, வந்து எதிர் தொழும் செந் நெறிச் செல்வரோடு
அன்று உறைந்து, அலர் கதிர்ப் பரிதி மண்டிலம் அகன்
குன்றின் நின்று இவர, ஓர் சுடு சுரம் குறுகினார். 4
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால், எரி சுடர்க் கடவுளும்
கருதின், வேம் உள்ளமும்; காணின், வேம் நயனமும். 5
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment