Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 85

பாலை நிலம்

இந்தப் பாலை நிலத்தின் சூட்டைப்பற்றிச் சொன்னால் நாக்கும் வெந்துபோகும். இருள், வெயில், மழை, மின்னல் அனைத்தும் இங்கு வெந்துபோகும். 6
அரக்கர் கொடுமையால் மனம் நொந்தவர் போல இந்த நிலத்தின் சூடு தணியாது. 7
கள்ளி பிளந்து உக்க அகில், மூங்கில் பிளந்து உதிர்ந்த முத்து, வேர்கள் பிளந்து தோன்றும் மணி ஆகியவை காடெங்கிலும் காணப்படும். 8
பேயோ, கானல் நீரோ கூட இந்தப் பாலைநிலத்தில் ஓடாது. 9
இங்குக் கிடக்கும் மணிகள் நிலமகளின் புண் கிழிந்து கிடப்பது போலத் தோன்றும். 10

படியின்மேல் வெம்மையைப் பகரினும், பகரும் நா
முடிய வேம்; முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்;
விடியுமேல், வெயிலும் வேம்; மழையும் வேம்; மின்னினோடு
இடியும் வேம்; என்னில், வேறு யாவை வேவாதவே?        6

விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட,
செஞ்செவே செருமுகத்து அன்றியே, திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல், என்றும் ஆறாது அரோ.  7

பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெருங் கள்ளியின்
தாய் பிளந்து உக்க கார் அகில்களும், தழை இலா
வேய் பிளந்து உக்க வெண் தரளமும், விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே-வனம் எலாம்.              8

பாரும் ஓடாது; நீடாது எனும் பாலதே:
சூரும் ஓடாது; கூடாதுஅரோ: சூரியன்
தேரும் ஓடாது, மா மாகம் மீ; தேரின், நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாது அரோ.      9

கண் கிழித்து உமிழ் விடக் கனல் அரா-அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி, வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள், மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே.   10

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...