பெண்மேல் அம்பு எய்யக்கூடாது
யானைக்கை போன்ற இரண்டு கை, வடம் கட்டிய இடுப்பு ஆகியவற்றுடன் ஏழு உலகங்களும் நடுங்குமாறு வந்தாள். 31
குகை போன்ற வாயைத் திறந்து இடி போன்ற குரலில் பேசலானாள். 32
நீங்கள் எதற்காக வந்தீர்கள், என்றாள். 33
என் வேலை நெஞ்சில் பாய்ச்சுவேன் என்றாள். 34
இவள் பெண் ஆயிற்றே, இவள்மீது அம்பு எய்யக்கூடாது என்று இராமன் நினைத்தான். 35
கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31
ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்- 32
'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே. 33
மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்' என்று, எதிர் அழன்றாள். 34
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்' என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
யானைக்கை போன்ற இரண்டு கை, வடம் கட்டிய இடுப்பு ஆகியவற்றுடன் ஏழு உலகங்களும் நடுங்குமாறு வந்தாள். 31
குகை போன்ற வாயைத் திறந்து இடி போன்ற குரலில் பேசலானாள். 32
நீங்கள் எதற்காக வந்தீர்கள், என்றாள். 33
என் வேலை நெஞ்சில் பாய்ச்சுவேன் என்றாள். 34
இவள் பெண் ஆயிற்றே, இவள்மீது அம்பு எய்யக்கூடாது என்று இராமன் நினைத்தான். 35
கடம் கலுழ் தடங் களிறு கையொடு கை தெற்றா,
வடம் கொள, நுடங்கும் இடையாள், மறுகி வானோர்
இடங்களும், நெடுந் திசையும், ஏழ் உலகும், யாவும்,
அடங்கலும் நடுங்க, உரும் அஞ்ச, நனி ஆர்த்தாள். 31
ஆர்த்து, அவரை நோக்கி நகைசெய்து, எவரும் அஞ்ச,
கூர்த்த நுதி முத் தலை அயில் கொடிய கூற்றைப்
பார்த்து, எயிறு தின்று, பகு வாய்முழை திறந்து, ஓர்
வார்த்தை உரைசெய்தனள்-இடிக்கும் மழை அன்னாள்- 32
'கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட, கருவறுத்தனென்; இனி, "சுவை கிடக்கும்
விடக்கு அரிது" எனக் கருதியோ? விதிகொடு உந்த,
படக் கருதியோ?-பகர்மின், வந்த பரிசு!' என்றே. 33
மேகம் அவை இற்று உக விழிந்தனள், புழுங்கா,
மாக வரை இற்று உக உதைத்தனள்; மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி, அயில் பற்றா,
'ஆகம் உற உய்த்து, எறிவென்' என்று, எதிர் அழன்றாள். 34
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும், 'ஆவி
உண்' என, வடிக் கணை தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும்,
'பெண்' என மனத்திடை பெருந்தகை நினைந்தான். 35
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment