Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 92

தாடகையைக் கொல், என்றான் முனிவன்

சாகும் நேரம் வராமல், தருமம் பார்க்காமல், வானுலகம் அனுப்பாமல், இவளைப் போலப் பிடித்துத் தின்னும் கூற்றம் வேறு ஏதும் இல்லை. 41
உயிரினங்களை எல்லாம் வாரி உண்ணும் தீமையை இவளைப்போலச் செய்பவர் வேறு யார்? இவளைப் பெண் என்று எண்ணக்கூடாது. 42
அறம் நோக்கி இதனைக் கூறுகிறேன். இவள்மேல் உள்ள சினத்தால் அன்று. இந்த அரக்கியைக் கொல் – என்று வசிட்டன் கூறினான். 43
ஐய! அறம் அல்லாததைத் தாங்கள் கூறினாலும் அதனைச் செய்வதுதான் நான் அறம் செய்யும் முறைமை – என்றான் இராமன். 44
இராமன் கருத்தைக் கேட்ட தாடகை இராமன்மேல் தன் சூலத்தை வீசினாள். 45

'சாற்றும் நாள் அற்றது எண்ணி, தருமம் பார்த்து,
ஏற்றும் விண் என்பது அன்றி, இவளைப் போல்,
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்?-கூற்று உறழ் வேலினாய்!                41

'மன்னும் பல் உயிர் வாரி, தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது? -ஐய!-
"பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை, எளிமையின் பாலதே!        42

'ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அருள் அன்று; அரக்கியைக்
கோறி' என்று, எதிர் அந்தணன் கூறினான்.     43

ஐயன் அங்கு அது கேட்டு, 'அறன் அல்லவும்
எய்தினால், "அது செய்க!" என்று ஏவினால்,
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு' என்றான்.   44

கங்கைத் தீம் புனல் நாடன் கருத்தை, அம்
மங்கைத் தீ அனையாளும் மனக்கொளா,
செங் கைச் சூல வெந் தீயினை, தீய தன்
வெங் கண் தீயொடு மேற்செல வீசினாள்.       45

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...