![]() |
தாடகை வரவு |
![]() |
தாடகை வீழ்ச்சி |
எமன் போன்ற தாடகை இராமன் மேல் ஏவிய சூலம் நிலாவை மறைக்க வரும் நிழல் போல் வந்தது. 46
இராமன் அம்பு பட்டு அந்தச் சூலம் துண்டானது. 47
தாடகை கல்மழை பொழிந்தாள். இராமன் அம்பு மேகத்தால் அதனைத் தடுத்தான். 48
இராமன் விட்ட அம்பு தாடகை மார்பில் பாய்ந்து, நல்லோர் சொன்ன சொல் அற்பருக்கு ஏறாதது போல அவள் முதுகுப் பக்கமாக வெளியேறியது. 49
இராமனின் அம்புக்காற்று பட்டதும் தாடகையானவள் மேகம் இடுயோடும் மின்னலோடும் தரையில் விழுவது போல விழுந்தாள். 50
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூஇலைக் கால வெந் தீ, முனி
விதியை மேற்கொண்டு நின்றவன்மேல், உவா
மதியின்மேல் வரும் கோள் என, வந்ததே. 46
மாலும், அக் கணம் வாளியைத் தொட்டதும்,
கோல வில் கால் குனித்ததும், கண்டிலர்;
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர். 47
அல்லின் மாரி அனைய நிறத்தவள்,
சொல்லும் மாத்திரையின், கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின், வீரன் விலக்கினான். 48
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது, அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே! 49
பொன் நெடுங் குன்றம் அன்னான், புகர் முகப் பகழி என்னும்
மன் நெடுங் கால வன் காற்று அடித்தலும், -இடித்து, வானில்
கல் நெடு மாரி பெய்யக் கடையுகத்து எழுந்த மேகம்,
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல-வீழ்ந்தாள். 50
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment