மிகைப் பாடல்கள் – பகுதி 1
விசுவாமித்திரர் பிரம மந்திரம் இரண்டினை இராமனுக்கும் இலக்குவனுக்கும் சொல்லிக்கொடுத்தார். அதனைக் கூறியதும் கனல் வீசும் காடு ஆற்றுநீரில் குளிப்பது போல் ஆயிற்று. 18-1
முனிவர் தாடகை வரலாற்றைக் கூறலானார். மலை போன்ற தோள் கொண்டவனே! கேள். பிரமன் படைத்த உயிரிங்கள் எல்லாவற்றையும் வாரி வாயில் போட்டுச் செரிமானம் செய்துகொள்பவள் பற்றிச் சொல்கிறேன். கேள். 20-1
சற்சரன் போல வலிமை கொண்டவன் சுகேது. 20-2
மகப்பேறு வேண்டிச் சுகேது பிரமனை நோக்கித் தவம் செய்தான். 20-3
மகள் பிறக்கப் பிரமன் வரம் தந்தான். 20-4
உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்: 18-1
'கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்: 20-1
'இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான். 20-2
'அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான். 20-3
'முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும் நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான். 20-4
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
விசுவாமித்திரர் பிரம மந்திரம் இரண்டினை இராமனுக்கும் இலக்குவனுக்கும் சொல்லிக்கொடுத்தார். அதனைக் கூறியதும் கனல் வீசும் காடு ஆற்றுநீரில் குளிப்பது போல் ஆயிற்று. 18-1
முனிவர் தாடகை வரலாற்றைக் கூறலானார். மலை போன்ற தோள் கொண்டவனே! கேள். பிரமன் படைத்த உயிரிங்கள் எல்லாவற்றையும் வாரி வாயில் போட்டுச் செரிமானம் செய்துகொள்பவள் பற்றிச் சொல்கிறேன். கேள். 20-1
சற்சரன் போல வலிமை கொண்டவன் சுகேது. 20-2
மகப்பேறு வேண்டிச் சுகேது பிரமனை நோக்கித் தவம் செய்தான். 20-3
மகள் பிறக்கப் பிரமன் வரம் தந்தான். 20-4
உள்ளிய காலையின் ஊழித் தீயையும்
எள்ளுறு கொழுங் கனல் எரியும் வெஞ்சுரம்,
தெள்ளு தண் புனலிடைச் சேறல் ஒத்தது;
வள்ளலும், முனிவனை வணங்கிக் கூறுவான்: 18-1
'கல் நவில் தோளினாய்! கமலத் தோன் அருள்
மன்னுயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து,
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறையக் கேட்டியால்: 20-1
'இயக்கர்தம் குலத்துளான், உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான், எரியின் வெம்மையான்,
மயக்கு இல் சற்சரன், எனும் வலத்தினான், அருள்
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான். 20-2
'அன்னவன் மகவு இலாது அயரும் சிந்தையான்,
மன் நெடுந் தாமரை மலரின் வைகுறும்
நல் நெடு முதல்வனை வழுத்தி, நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான். 20-3
'முந்தினன் அரு மறைக் கிழவன், "முற்றும் நின்
சிந்தனை என்?" என,"சிறுவர் இன்மையால்
நொந்தனென்; அருள்க" என, "நுணங்கு கேள்வியாய்!
மைந்தர்கள் இலை; ஒரு மகள் உண்டாம்" என்றான். 20-4
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment