மிகைப் பாடல்கள் – பகுதி 2
ஆயிரம் மதயானை வலிமையுடன் ஒரு மகள் பிறப்பாள் என்றான் பிரமன். 20-5
அவ்வாறு பிறந்த மகள் தாடகை. தாடகையை அவள் தந்தை சுகேது, சுந்தன் என்பவனுக்கு மணம் முடித்துத் தந்தான். 20-6
காமனும் இரதியும் போல இருவரும் இன்பம் துய்த்து வாழ்ந்தனர். 20-7
தாடகை மாரீசன், சுவாகு என்னும் இரண்டு மகனைப் பெற்றாள். 20-8
ஆற்றலிலும், மாயமும், வஞ்சகமும் செய்வதிலும் இருவரும் தாயைக் காட்டிலும் அவர்கள் மேம்பட்டவர்களாக விளங்கினர். இதனைத் தந்தை சுந்தன் கண்டு களிப்பு எய்தினான். 20-9
'"பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
போ" என, மலர் அயன் புகன்று போயினான். 20-5
'ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு, "இவட்கு
ஆயவன் யார்கொல்?" என்று ஆய்ந்து, தன் கிளை
நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான். 20-6
'"காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்" என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார். 20-7
'பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார். 20-8
'மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான். 20-9
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
ஆயிரம் மதயானை வலிமையுடன் ஒரு மகள் பிறப்பாள் என்றான் பிரமன். 20-5
அவ்வாறு பிறந்த மகள் தாடகை. தாடகையை அவள் தந்தை சுகேது, சுந்தன் என்பவனுக்கு மணம் முடித்துத் தந்தான். 20-6
காமனும் இரதியும் போல இருவரும் இன்பம் துய்த்து வாழ்ந்தனர். 20-7
தாடகை மாரீசன், சுவாகு என்னும் இரண்டு மகனைப் பெற்றாள். 20-8
ஆற்றலிலும், மாயமும், வஞ்சகமும் செய்வதிலும் இருவரும் தாயைக் காட்டிலும் அவர்கள் மேம்பட்டவர்களாக விளங்கினர். இதனைத் தந்தை சுந்தன் கண்டு களிப்பு எய்தினான். 20-9
'"பூ மட மயிலினைப் பொருவும் பொற்பொடும்,
ஏமுறு மதமலை ஈர்-ஐஞ்ஞூறுடைத்
தாம் மிகு வலியொடும், தனயை தோன்றும்; நீ
போ" என, மலர் அயன் புகன்று போயினான். 20-5
'ஆயவன் அருள்வழி, அலர்ந்த தாமரைச்
சேயவள் என வளர் செவ்வி கண்டு, "இவட்கு
ஆயவன் யார்கொல்?" என்று ஆய்ந்து, தன் கிளை
நாயகன், சுந்தன் என்பவற்கு நல்கினான். 20-6
'"காமனும் இரதியும் கலந்த காட்சி ஈது
ஆம்" என, இயக்கனும் அணங்கு அனாளும், வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்,
தாம் உறு பெருங் களிச் சலதி மூழ்கினார். 20-7
'பற்பல நாள் செலீஇ, பதுமை போலிய
பொற்பினாள் வயிற்றிடை, புவனம் ஏங்கிட,
வெற்பு அன புயத்து மாரீசனும், விறல்
மல் பொரு சுவாகுவும், வந்து தோன்றினார். 20-8
'மாயமும், வஞ்சமும், வரம்பும் இல் ஆற்றலும்,
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஓணாது,
ஆயவர் வளர்வுழி, அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும், களிப்பின் மேன்மையான். 20-9
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment