Saturday, February 24, 2018

கம்பராமாயணம் – பாலகாண்டம் - தாடகை வதைப் படலம் Kamba Ramayanam 97

மிகைப் பாடல்கள் – பகுதி 3 அகத்தியன்

அரக்கர் தீமைகளைப் போக்குவதற்காகக் கடல் முழுவதையும் ஒரு கையில் மொண்டு பருகிய முனிவன் அகத்தியன் இருக்கும் இடத்துக்குத் தாடகை வந்தாள். 20-10
அங்கு இருந்த மான்களைத் தின்றாள். அங்கு வளர்ந்திருந்த வழை முதலான மரங்களைப் பிடுங்கி எறிந்தாள். 20-11
அகத்தியனையும் உண்டு முடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அகத்தியன் அருகில் வந்தாள். 20-12
இடி, சிங்கம், காற்று, தேவர், கதிரவன், மேகம் அனைத்தும் நடுங்குமாறு அகத்தியனை அழைத்தாள். 20-13
தமிழ் தந்த முனிவன் சினம் கொண்டு அரக்கர் குணம் படைத்தவள் ஆகுமாறு சாபமிட்டார். 20-14

தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான்.               20-10

'விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான்.                20-11
  
'மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
'முற்றுற முடிக்குவென் முனியை' என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள்.          20-12

'இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே.            20-13

'தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே.                20-14

கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்

No comments:

Post a Comment

கம்பராமாயணம் – பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் Kamba Ramayanam 132

மூவரும் மிதிலைத் தெருவில் சென்றனர் “மலரை விட்டுவிட்டுத் திருமகள் இங்கே இருக்கிறாள். விரைந்து வருக” என்று இராமனை அழைப்பது போல் மிதிலை நகரத...