மிகைப் பாடல்கள் – பகுதி 3 அகத்தியன்
அரக்கர் தீமைகளைப் போக்குவதற்காகக் கடல் முழுவதையும் ஒரு கையில் மொண்டு பருகிய முனிவன் அகத்தியன் இருக்கும் இடத்துக்குத் தாடகை வந்தாள். 20-10
அங்கு இருந்த மான்களைத் தின்றாள். அங்கு வளர்ந்திருந்த வழை முதலான மரங்களைப் பிடுங்கி எறிந்தாள். 20-11
அகத்தியனையும் உண்டு முடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அகத்தியன் அருகில் வந்தாள். 20-12
இடி, சிங்கம், காற்று, தேவர், கதிரவன், மேகம் அனைத்தும் நடுங்குமாறு அகத்தியனை அழைத்தாள். 20-13
தமிழ் தந்த முனிவன் சினம் கொண்டு அரக்கர் குணம் படைத்தவள் ஆகுமாறு சாபமிட்டார். 20-14
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். 20-10
'விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான். 20-11
'மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
'முற்றுற முடிக்குவென் முனியை' என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். 20-12
'இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே. 20-13
'தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே. 20-14
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
அரக்கர் தீமைகளைப் போக்குவதற்காகக் கடல் முழுவதையும் ஒரு கையில் மொண்டு பருகிய முனிவன் அகத்தியன் இருக்கும் இடத்துக்குத் தாடகை வந்தாள். 20-10
அங்கு இருந்த மான்களைத் தின்றாள். அங்கு வளர்ந்திருந்த வழை முதலான மரங்களைப் பிடுங்கி எறிந்தாள். 20-11
அகத்தியனையும் உண்டு முடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு அகத்தியன் அருகில் வந்தாள். 20-12
இடி, சிங்கம், காற்று, தேவர், கதிரவன், மேகம் அனைத்தும் நடுங்குமாறு அகத்தியனை அழைத்தாள். 20-13
தமிழ் தந்த முனிவன் சினம் கொண்டு அரக்கர் குணம் படைத்தவள் ஆகுமாறு சாபமிட்டார். 20-14
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர,
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு
மாதவன் உறைவிடம் அதனின் வந்து, நீள்
பாதவம் அனைத்தையும் பறித்து வீசினான். 20-10
'விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு
உழை, கலை, இரலையை உயிர் உண்டு, ஓங்கிய
வழை முதல் மரன் எலாம் மடிப்ப, மா தவன்
தழல் எழ விழித்தனன்; சாம்பல் ஆயினான். 20-11
'மற்றவன் விளிந்தமை மைந்தர் தம்மொடும்
பொற்றொடி கேட்டு, வெங் கனலின் பொங்குறா,
'முற்றுற முடிக்குவென் முனியை' என்று எழா,
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள். 20-12
'இடியொடு மடங்கலும் வளியும் ஏங்கிட,
கடி கெட அமரர்கள், கதிரும் உட்கிட,
தடியுடை முகில் குலம் சலிப்ப, அண்டமும்
வெடிபட, அதிர்ந்து, எதிர் விளித்து மண்டவே. 20-13
'தமிழ் எனும் அளப்ப அருஞ் சலதி தந்தவன்
உமிழ் கனல் விழி வழி ஒழுக, உங்கரித்து
"அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே
இழிக!" என, உரைத்தனன், அசனி எஞ்சவே. 20-14
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment