மிகைப் பாடல்கள் – பகுதி 4
தாடகையும் அவளைச் சேர்ந்தவர்களும் அகத்தியன் சாபத்தால் அக்கணத்திலையே அரக்கர்களாக மாறினர். 20-15
சுமாலியை கொடுத்து “உனக்கு நாங்கள் உறவுக்காரர்கள்” என்று இராவணனிம் கூறிக்கொண்டனர். 20-16
இராவணன் மைத்துனர் என்று சொல்லிக்கொண்டு பாதாள உலகில் நீண்ட காலம் வாழ்ந்தனர். எல்லா உலகங்களுக்கும் சென்று உயிரினங்களைப் புடைத்து அழித்து உண்டுவந்தனர். 20-17
பின்னர் அங்க நாட்டிலுள்ள இந்த வனத்துக்கு வந்து வாழ்கின்றனர், என்று விசுவாமித்திரன் இராமனிடம் கூறினான். 20-18
இது முன்னொரு காலத்தில் நிகழ்ந்தது என்று விசுவாமித்திரன் மேலும் சொன்னான். 39-1
'வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர். 20-15
'ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, "நின்கு யாம்
ஓங்கிய புதல்வர்" என்று, உறவு கூர்ந்தனர். 20-16
'அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள். 20-17
'மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள். 20-18
'மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது'
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். 39-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
தாடகையும் அவளைச் சேர்ந்தவர்களும் அகத்தியன் சாபத்தால் அக்கணத்திலையே அரக்கர்களாக மாறினர். 20-15
சுமாலியை கொடுத்து “உனக்கு நாங்கள் உறவுக்காரர்கள்” என்று இராவணனிம் கூறிக்கொண்டனர். 20-16
இராவணன் மைத்துனர் என்று சொல்லிக்கொண்டு பாதாள உலகில் நீண்ட காலம் வாழ்ந்தனர். எல்லா உலகங்களுக்கும் சென்று உயிரினங்களைப் புடைத்து அழித்து உண்டுவந்தனர். 20-17
பின்னர் அங்க நாட்டிலுள்ள இந்த வனத்துக்கு வந்து வாழ்கின்றனர், என்று விசுவாமித்திரன் இராமனிடம் கூறினான். 20-18
இது முன்னொரு காலத்தில் நிகழ்ந்தது என்று விசுவாமித்திரன் மேலும் சொன்னான். 39-1
'வெருக்கொள, உலகையும் விண்ணுளோரையும்
முருக்கி, எவ் உயிரும் உண்டு, உழலும் மூர்க்கராம்
அரக்கர்கள் ஆயினர், அக் கணத்தினில்
உருக்கிய செம்பென உமிழ் கண் தீயினர். 20-15
'ஆங்கு அவன், வெகுளியும், அறைந்த சாபமும்
தாங்கினர்; எதிர் செயும் தருக்கு இலாமையின்,
நீங்கினர்; சுமாலியை நேர்ந்து, "நின்கு யாம்
ஓங்கிய புதல்வர்" என்று, உறவு கூர்ந்தனர். 20-16
'அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ,
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என, புடைத்து அழித்து, உலகம் எங்கணும்,
பவனனின் திரிகுநர், பதகி மைந்தர்கள். 20-17
'மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா,
தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே,-
வகுந்துவின் வசுவரி வதிந்தது இவ் வனம்
புகுந்தனள்,-அழல் எனப் புழுங்கும் நெஞ்சினாள். 20-18
'மன்னர் மன்னவன் காதல! மற்றும் ஒன்று
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்,
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது'
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான். 39-1
கம்பராமாயணம் – 1. பாலகாண்டம் 7. தாடகை வதைப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம்
தமிழ்ப் பண்பாடு நோக்கில் கம்பன் தமிழ் வளம்
No comments:
Post a Comment